இந்த முகாமில் 1561 மனுக்கள் பெறப்பட்டன. இதில் மின் இணைப்பு பெயர் மாற்றம், தொழிலாளர் நல வாரிய அட்டை வழங்குதல், பட்டா பெயர் மாற்றம் ஆகிய மனுக்கள் மீது உடனடியாக தீர்வு காணப்பட்டது. அதற்கான ஆணைகளை ஈரோடு மாவட்ட ஆட்சியர் கந்தசாமி கலந்து கொண்டு பயனாளிகளுக்கு வழங்கினார்.
இதில் திமுக மாநில நெசவாளர் அணி செயலாளர் எஸ். எல். டி சச்சிதானந்தம், காங்கிரஸ் மாநில பொதுக்குழு உறுப்பினர் எல். பி. பாலசுப்பிரமணியன், ஈரோடு மாவட்ட திட்டஇயக்குனர் பிரியா, உதவி செயற்பொறியாளர் கற்பகம், மொடக்குறிச்சி தாசில்தார் சிவசங்கர், ஊராட்சி செயலாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.