வாகனங்கள் மெதுவாக ஊர்ந்து சென்றன. சூறைக்காற்று வீசியதால் மழையில் நனையாமல் இருக்க குடையை பிடித்துக்கொண்டு செல்வதற்கே சிரமம் ஏற்பட்டது. இருசக்கர வாகனத்தில் சென்றவர்கள் மேற்கொண்டு வாகனத்தை ஓட்ட முடியாமல் சாலையோரமாக நிறுத்திவிட்டு மழைக்கு ஒதுங்கினர். ஈரோடு மணிக்கூண்டு, கருங்கல்பாளையம், பெரியவலசு, சூரம்பட்டி, ரெயில் நிலையம், ரங்கம்பாளையம், கொல்லம்பாளையம் என ஈரோடு மாநகரில் பெரும்பாலான பகுதியில் மழை பெய்தது. ரங்கம்பாளையம், திண்டல், ஈரோடு பஸ் நிலைய பகுதி உள்பட பல்வேறு இடங்களில் மின் வினியோகம் துண்டிக்கப்பட்டது. இரவு நேரத்தில் மின்சாரம் இல்லாமல் பொதுமக்கள் அவதி அடைந்தனர்.
ஜீப் கவிழ்ந்த விபத்தில் 17 பேர் உயிரிழப்பு