இந்நிலையில், கடந்த சில நாட்களாக பெய்த மழைக்காரணமாக, ஈரோடு மார்க்கெட்டுகளுக்கு காய்கறிகள் வரத்து குறைந்துள்ளது. குறிப்பாக, பீன்ஸ் வரத்து அதிகளவில் குறைந்துள்ளது. இதனால், கடந்த சில நாட்களுக்கு முன்பு ரூ. 80க்கும் விற்கப்பட்ட ஒரு கிலோ பீன்ஸ் நேற்று முன்தினம் ரூ. 130க்கும், நேற்று ரூ. 144க்கும் விற்பனை செய்யப்பட்டது. இதன் வரத்து மேலும் குறைந்தால், அதன் விலை மீண்டும் அதிகரிக்கும் என வியாபாரிகள் தெரிவித்தனர்.
நடிகை பிந்து மாதவி தெலுங்கு பட உலகில் ரீஎன்ட்ரி