ஈரோடு மாவட்டம் தாளவாடி அருகே காமயன்புரம் கிராமத்தை சேர்ந்த ஒரே குடும்பத்தினர் ரங்கசாமி, புட்டுசித்தம்மா, மகேஷ் ஆகியோர் சுமார் 30 வருடங்களாக கேரள மாநிலம் வயநாட்டில் தங்கி பணிபுரிந்து வந்துள்ளனர். தற்பொழுது ஏற்பட்டுள்ள நிலச்சரிவில் மேற்படி மூன்று நபர்கள் இறந்துள்ளனர். புட்டுசித்தம்மா என்பவரின் உடல் நேற்றய முன்தினம் தாளவாடிக்கு கொண்டுவரப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது. ரங்கசாமி என்பவரின் உடல் பிரேத பரிசோதனைக்கு பிறகு தாளவாடி பகுதிக்கு கொண்டு வருவார் என கூறப்பட்ட நிலையில் பேரன் மகேஷின் உடல் தேடப்பட்டு வருகிறது. தாளவாடி பகுதியில் இச்சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Motivational Quotes Tamil