ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் காவல்துறை துணை கண்காணிப்பாளர் முத்தரசன் தலைமையில் 15 அலுவலர்கள், அப்பகுதியில் உள்ள கிராமங்கள், சித்தன்குட்டை, ஜெ. ஜெ நகர், அய்யம்பாளையம், மணல்மேடு, கன்றாயன் மொக்கை அணை நீர்த்தேக்க பகுதி மற்றும் வனப்பகுதியில் சாராயம் ஊரல், கஞ்சா விற்பனை, மது விற்பனை ஆகியவற்றின் பயன்பாடுகள் மற்றும் பழைய குற்றவாளிகள் குறித்து தீவிர சோதனை மற்றும் கண்காணிப்பு நடத்தினர். இதன் மூலம் பொது மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.