இதில் கோபி-சத்தி மெயின் ரோட்டில் நெடுஞ்சாலைத் துறை அலுவலகம் முன்பு வலுவிழந்து காணப்பட்ட வேப்ப மரத்தின் கிளை முறிந்து ரோட்டில் சென்ற ஸ்கூட்டர், மோட்டார்சைக்கிள் மீது விழுந்தது. இதில் ஸ்கூட்டரில் சென்ற பெண், மோட்டார் சைக்கிளில் சென்ற 2 பேர் லேசான காயம் அடைந்தனர். இதைத்தொடர்ந்து அவர்கள் கோபியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதுகுறித்த தகவல் கிடைத்ததும் நெடுஞ்சாலைத்துறையினர் மற்றும் தீயணைப்பு துறையினர் அங்கு சென்று மரக்கிளையை வெட்டி அகற்றினர். மேலும் இதுகுறித்து கோபி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.