ஈரோடு: மதில் சுவரில் படுத்திருந்த சிறுத்தை.. வாகன ஓட்டிகள் அச்சம்

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் 10 வனச்ச ராகங்கள் உள்ளன. இங்கு யானை, சிறுத்தை, புலி, கரடி, காட்டெருமை, மான்கள் உட்பட பல்வேறு வன விலங்குகள் வசித்து வருகின்றன. திம்பம் மலைப்பகுதி தமிழகம் - கர்நாடகாவை இணைக்கும் மிக முக்கிய போக்குவரத்து பகுதியாக இருந்து வருகிறது. திம்பம் மலைப்பாதை 27 கொண்டை ஊசி வளைவுகளை கொண்டது. இங்கு இரவு நேரங்களில் யானை, சிறுத்தைகள் நடமாட்டம் அதிகளவில் இருக்கும்.
இந்நிலையில் நேற்று இரவு திம்பம் மலைப்பாதையில் உள்ள சாலையோரம் மதில் சுவர் ஒன்றில் சிறுத்தை ஒன்று படுத்து இருந்தது. இதை அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் கண்டு அதிர்ச்சி அடைந்து தங்களது வாகனங்களை சற்று தொலைவிலேயே நிறுத்தினர். பதில் சுவரில் சிறிது நேரம் படுத்திருந்த சிறுத்தை பின்னர் சாலையைக் கடந்து மெதுவாக வனப் பகுதிக்குள் சென்றது. அதன் பிறகு அங்கிருந்து வாகனங்கள் கிளம்பி சென்றன. சிறுத்தை மதில் சுவரில் படுத்திருந்ததை அங்குள்ள வாகன ஓட்டிகள் தங்களது செல்போனில் வீடியோவாக பதிவு செய்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி