கடத்தூரில் லாட்டரி விற்றவர் கைது

கடத்தூர் அடுத்த ஊஞ்சப்பாளையம் பஸ் ஸ்டாப்பில் ஒருவர் லாட்டரி விற்பனையில் ஈடுபடுவதாக, கடத்தூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில், அப்பகுதியில் நேற்று முன்தினம் போலீசார் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். அங்கு வெள்ளை தாளில் சீரியல் எண் எழுதப்பட்ட துண்டு சீட்டு வைத்திருந்த நபர், போலீசாரை கண்டதும் ஓட முயன்றார். அந்த நபரை விரட்டிப் பிடித்த போலீசார் விசாரித்தனர். அதில், ஊஞ்சப்பாளையத்தைச் சேர்ந்த ஆனந்தன் (26) என்பதும், லாட்டரி விற்பனையில் ஈடுபட்டதும் தெரியவந்தது. இதனையடுத்து, அவரை போலீசார் கைது செய்தனர்.

தொடர்புடைய செய்தி