ஈரோடு: டி. ஜி. புதூரில் லாட்டரி விற்றவர் கைது

ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிப்பாளையம் அடுத்த டி.என்.பாளையம் அடுத்த டி.ஜி.புதூர் காமராஜர் வீதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்து வருவதாக பங்களாப்புதூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. 

அதன்பேரில் போலீசார் அங்கு சென்று சந்தேகப்படும் வகையில் நின்றிருந்த நபரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் டி.ஜி.புதூர் காமராஜர் வீதியைச் சேர்ந்த குமார் (வயது 51) என்பதும், அவர் செல்போன் மூலம் லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து ரூ.1 லட்சத்து 72 ஆயிரத்து 700 மற்றும் 20 கேரள லாட்டரி சீட்டுகள், சில கட்டை, செல்போன் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.

தொடர்புடைய செய்தி