கேரளா மாநில முன்னாள் முதல்வர் பினராயி விஜயன் வீட்டில் அமலாக்கத்துறை அத்துமீறி நடத்தி வரும் சோதனையை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் சண்முகம் தலைமையில் ஈரோட்டில் ஆர்ப்பாட்டமானது நடைபெற்றது. மோடி, அமித்ஷா ஆகியோர் தங்களுக்கு பிடிக்காத தலைவர்களின் வீடுகளில் அரசியல் பழிவாங்கல் நடவடிக்கையாக அமலாக்கத்துறை சோதனை நடத்துவதை வழக்கமாக வைத்துள்ளனர். இது ஜனநாயக அத்து மீறல் சட்ட விரோத நடவடிக்கைக்கு எதிராக போராட்டம் தொடரும். இது எதிர்கட்சிகளை அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என்றும் கூறினார்