ஈரோடு மாவட்டம் ஆசனூர் சோதனை சாவடியில் மார்ச் 1 போலீசார் சந்தேகத்திற்கிடமான வகையில் வந்த வாலிபரை பிடித்து சோதனை செய்தபோது, அவரிடம் கர்நாடக மதுபானம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. விசாரணையில், அவர் கோபி அடுத்த கொங்கர்பாளையத்தை சேர்ந்த சக்திவேல் (25) என்பதும், அதிக விலைக்கு விற்பனை செய்வதற்காக மதுபானத்தை கடத்தி வந்ததும் தெரியவந்தது. இதைத் தொடர்ந்து, போலீசார் சக்திவேலை கைது செய்தனர்.