இந்த நிலையில் நேற்று பெய்த மழையில் புதிதாக அமைக்கப்பட்ட தார் சாலையில் ஆங்காங்கே விரிசல் ஏற்பட்டுள்ளது. மேலும் முறையாக திட்டமிடாமல் வடிகால் மற்றும் சிறு பாலங்கள் அமைத்ததால் மழைநீரானது வடிகாலில் செல்லாமல் குளம் போல் தேங்கி நிற்கிறது. மேலும் தனி நபருக்கு சொந்தமான இடங்களில் கழிவுநீரும் குப்பைகளும் தேங்கி நிற்கின்றன. முறையாக திட்டமிடாமல் அலட்சியமாக செயல்பட்டு அரசு பணத்தை வீணடித்த நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் மீதும், பணி செய்த ஒப்பந்ததாரர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மழை நீர் குளம் போல் தேங்காமல் செல்லவும் விரிசல் அடைந்த சாலையை சரி செய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
IND vs SL: டி20 தொடரை வெற்றியுடன் தொடங்கிய இந்திய அணி