ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அருகே இலங்கை தமிழர் முகாமில் கஞ்சா விற்பனை நடப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில், காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, பழைய இலங்கை முகாமைச் சேர்ந்த நிவில் என்பவரிடம் இருந்து விற்பனைக்காக வைத்திருந்த 30 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்து, அவரை கைது செய்தனர். பவானிசாகர் காவல்துறையினர் இது குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.