இதேபோன்று, திருப்பூர் மாவட்டம் அலகுமலை நாகேஸ்வரன் நகரைச் சேர்ந்தவர் மூர்த்தி (55). இவர் தனது மனைவியை 18 ஆண்டுகளுக்கு முன் விவகாரத்து செய்து விட்டு, ஈரோடு மாவட்டம் கோபி அடுத்த சீதாலட்சுமி புரத்தில் இளாகி என்பவருடன் கணவன் மனைவியாக வசித்து வந்துள்ளார்.
இந்நிலையில், பெங்களூரில் உள்ள தனது உறவினர் ஒருவர் உடல் நிலை சரியில்லை என்றும் அவரை பார்க்க போவதாகவும் இளாகி கூறியுள்ளார். இதனால் போக கூடாது என மூர்த்தி மறுத்ததால், இருவருக்கும் இடையே வாக்குவாகும் ஏற்பட்டுள்ளது. இதில் அதிருப்தியடைந்த மூர்த்தி, வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக, மூர்த்தியின் மகள் மோனிசா அளித்த புகாரின் பேரில், கோபி போலீசார் விசாரித்து வருகின்றனர்.