ஈரோடு வ. உ. சி. பூங்கா விளையாட்டு மைதானத்தில் இன்று (07.04.2026), சட்டமன்றத் தேர்தலில் பொதுமக்கள் வாக்களிக்க வலியுறுத்தி மாற்றுத்திறனாளிகளுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. ஈரோடு மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான திரு. ச. கந்தசாமி இ. ஆ. ப. அவர்கள் நிகழ்ச்சியில் தலைமை தாங்கி, விழிப்புணர்வுக்காக அமைக்கப்பட்டிருந்த 'செல்பி பாயிண்ட்' புகைப்பட சட்டகத்தில் மாற்றுத்திறனாளிகளுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார். ஜனநாயகக் கடமையை அனைவரும் ஆற்ற வேண்டும் என்பதே நிகழ்ச்சியின் முக்கிய நோக்கமாகும்.