ஈரோடு ரயில் நிலையத்தின் முக்கியத்துவம் மற்றும் தினசரி ரயில்கள் இயக்கப்படுவது குறித்து குறிப்பிடப்பட்டுள்ளது. வீட்டு வசதி, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் சு. முத்துசாமி நேற்று ஈரோடு ரயில் நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டார். பயணிகளுக்கான வசதிகள், எஸ்கலேட்டர், லிப்ட், கடைகளில் விற்கப்படும் உணவின் தரம் குறித்து ரயில்வே அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். மேலும், ரயில் நிலைய நுழைவு வாயிலில் பயணிகள் சிரமமின்றி செல்ல உரிய நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். ஆய்வின்போது மாவட்ட கலெக்டர், எம்.எல்.ஏ உள்ளிட்டோர் உடனிருந்தனர்.