ஈரோடு: மாணவியை கடத்தி பாலியல் பலாத்காரம்

ஈரோடு அருகே வடுகபாளையம்புதூர் பகுதியைச் சேர்ந்த தருண்குமார் (25) என்பவர், இன்ஸ்டாகிராம் மூலம் அறிமுகமான கோபியைச் சேர்ந்த 16 வயது மாணவியை 2023 ஜனவரியில் கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். மாணவி பேச மறுத்ததால், புகைப்படங்களை வெளியிடுவதாக மிரட்டியுள்ளார். இதுகுறித்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டதையடுத்து, போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட தருண்குமார், நீதிமன்ற விசாரணையின் முடிவில் 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை மற்றும் ரூ.10,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி