சித்தோடு: யார் மீது தவறு இருந்தாலும் நடவடிக்கை; கோவை சரக டிஐஜி

சித்தோடு காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் இன்று கொலை சம்பவம் நிகழ்ந்தது. இதில் இறந்தவர் சேலத்தை சேர்ந்த ஜான் என்பவர் உயிரிழந்தார். இந்த சம்பவத்தில் புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகளை பிடிக்கும் போது தப்பிச் செல்ல முயன்ற போது காவல் ஆய்வாளர் மற்றும் காவலர் ஆகியோர் தாக்கப்பட முற்பட்ட போது தற்காப்புக்காக துப்பாக்கிச் சுடுதல் நடந்தது. இதில் மூன்று பேர் காயமடைந்தனர். 

இவர்கள் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளனர். இதன் பின்னர் வழக்கு விசாரணைக்குப் பிறகு கைது செய்யப்படுவார்கள். தொடர்ந்து போலீசார் குற்றவழக்கில் தொடர்புடையவர்களை கண்காணித்து வருகின்றனர். இந்த சம்பவத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

இதுபோன்ற சம்பவங்கள் நடக்காத வகையில் நடவடிக்கை எடுக்கப்படும். தற்போது நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மாத விசாரணையில் மீதமுள்ள நபர்கள் குறித்து நடவடிக்கை எடுக்கப்படும். குற்றச் சரித்திர பதிவேட்டில் உள்ள குற்றவாளிகளை கண்காணிப்பதற்கு தனியாக காவல்துறையினர் பணியில் உள்ளனர். அவர்கள் வீடுகள் மற்றும் நீதிமன்றம் வருவதையும் கண்காணித்து வருகின்றனர். 

பேட்ரோல் வாகனம் இருந்தது. இப்படி சம்பவம் நிகழ்ந்தது என்று தெரியவில்லை. எப்படி நடந்தது என்று விசாரணைக்குப் பிறகுதான் தெரியும். தவறு யார் மீது இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கோவை சரக டிஐஜி சசி மோகன் கூறினார்.

தொடர்புடைய செய்தி