இருப்பினும், அருகில் இருந்த குப்பைகளுக்கு தீ பரவிக்கொண்டே இருந்தது. இதனிடையே, மாநகராட்சி ஆணையர் அர்பித்ஜெயின் உள்ளிட்ட அதிகாரிகள், சம்பவ இடத்திற்கு நேரில் வந்து, பணிகளை துரிதப்படுத்தினர். பின், சுமார் 7 மணிநேரப் போராட்டத்திற்குப் பிறகு தீயை மட்டும் கட்டுக்குள் கொண்டுவந்து அணைத்தனர்.
இருப்பினும், புகை மட்டும் தொடர்ந்து இருந்துகொண்டே இருந்தது. இந்தப் புகை தீயாக மாறுவதற்கு வாய்ப்புள்ளதால், அதனைக் கட்டுப்படுத்தும் பணியை, தீயணைப்பு வீரர்கள் துவங்கினர். நேற்று முன்தினம் மாலையில் இருந்து துவங்கி, நேற்று மதியம் மூன்று மணிக்கு நிறைவடைந்தது. புகை முழுவதும் கட்டுக்குள் வந்ததைத் தொடர்ந்து, கிடங்கில் இருந்த குப்பைகள் அனைத்தையும் ஈரமாக்கும் பணிகளும் நடந்து முடிந்தது.