ஈரோடு அடுத்த ரங்கம்பாளையம் பகுதியில் நள்ளிரவில் நான்கு பேர் கொண்ட மர்ம கும்பல் முகமூடி அணிந்து வீடுகளை நோட்டமிட்டபடி சென்றது. இந்த காட்சிகள் சிசிடிவி கேமராக்களில் பதிவாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. இதுவரை எந்த திருட்டு சம்பவமும் நிகழவில்லை என்றாலும், எதிர்கால கொள்ளை முயற்சி குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.