ஈரோடு மாவட்டம் அரச்சலூர் பகுதியில், குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த ஆம்னி வேனை நிறுத்தி சோதனை மேற்கொண்டனர். வேனில் 1, 200 கிலோ ரேஷன் அரிசி கடத்தி வந்தது தெரியவந்தது. தொடர்ந்து அவற்றை பறிமுதல் செய்து காரை ஓட்டி வந்த சதீஷ் என்பவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.