இந்த இடைத்தேர்தலில் பொறுத்த வரையிலும் திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய உதயசூரியன் சின்னம் மிகப்பெரிய வெற்றியை பெறும். அந்த மிகப்பெரிய வெற்றிக்கு காரணமாக இருக்கப் போவது கடந்த நான்கு ஆண்டுகால திராவிட மாடல் அரசின் மக்கள் நல திட்டங்களே. இந்த மிகப்பெரிய வெற்றிக்கு காரணமாக இருக்கும். தற்போது வாக்குப்பதிவு துவங்கி நடந்து கொண்டிருக்கின்ற நிலையில் நான் எனது வாக்குச்சாவடியில் என்னுடைய வாக்கை பதிவு செய்துவிட்டு வந்திருக்கின்றேன். இந்த தேர்தலில் இந்த கிழக்கு தொகுதியில் இருக்கின்ற மக்கள் அனைவரும் உங்களுடைய வாக்குகளை தவறாமல் செலுத்தி ஜனநாயக கடமையாற்ற வேண்டும் என உங்களையெல்லாம் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன் என கூறினார்.
ஐரோப்பிய யூனியன் மந்திரிகளுடன் ஜெய்சங்கர் சந்திப்பு: வர்த்தகம், அரசியல் குறித்து ஆலோசனை