ஈரோடு: கஞ்சா பதுக்கிய வழக்கில் டிரைவர் கைது

ஈரோடு அருகே கருங்காடு, பொன்னாண்டா வலசு பகுதியில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில், மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். சோதனையில், கேசவன் (40) என்பவர் வீட்டில் 3 கிலோ கஞ்சா பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவரை கைது செய்த போலீசார், மேல் விசாரணைக்காக மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு அலுவலகத்திற்கு அழைத்துச் சென்றனர்.

தொடர்புடைய செய்தி