இதேபோல் காவிரிக்கரையில் இருந்தும், பல்வேறு கோவில்களில் இருந்தும் பக்தர்கள் தீர்த்தக்குடம், பால் குடம் எடுத்து ஊர்வலமாக பெரிய மாரியம்மன் கோவிலுக்கு வந்தனர். அங்கு அவர்கள் பக்தி கோஷம் முழங்க கம்பத்துக்கு புனிதநீர், பால் ஊற்றி வழிபட்டனர். கோவிலின் முன்பு ஏராளமான பக்தர்கள் திரண்டதால் ஒரு வழிப்பாதையில் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டது. இதேபோல் சின்ன மாரியம்மன், காரை வாய்க்கால் மாரியம்மன் கோவில்களிலும் கம்பத்துக்கு ஏராளமான பக்தர்கள் புனிதநீர், பால் ஊற்றி அம்மனை வழிபட்டனர். விழாவையொட்டி பெரிய மாரியம்மன், சின்ன மாரியம்மன், காரை வாய்க்கால் மாரியம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
“விஜய் மேலாளர் என்னிடம் பணம் தருவதாக பேரம் பேசினார்”.. தவாக தலைவர் வேல்முருகன்