ஈரோடு ரயில் நிலையம் முன்பு கம்யூனிஸ்ட் இயக்க தொழிற்சங்கம் சார்பில் மத்திய அரசை கண்டித்து அகில இந்திய வேலை நிறுத்த போராட்டம் நடைபெற்றது. இதில் நூற்றுக்கணக்கானோர் பங்கேற்றனர். விவசாயம், வர்த்தகம், பால்வளம், மின்சாரம் போன்ற துறைகளை கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு தாரை வார்ப்பதை எதிர்த்தும், தொழிலாளர் விரோத சட்டங்களை கண்டித்தும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கம்யூனிஸ்ட் இயக்க தொழில் சங்கங்கள் மற்றும் மக்கள் ஜனநாயக இளைஞர் கழகம் உள்ளிட்ட பல்வேறு தொழிற்சங்கங்களைச் சேர்ந்தவர்கள் இதில் கலந்துகொண்டனர்.