ஈரோடு மகளிர் நீதிமன்றம், 14 வயது சிறுமியை பாலியல் தொல்லைக்குள்ளாக்கி கர்ப்பமாக்கிய 38 வயது தொழிலாளி செல்வத்திற்கு போக்சோ சட்டத்தின் கீழ் 40 ஆண்டுகள் சிறைத்தண்டனை மற்றும் 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து இன்று தீர்ப்பளித்தது. பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு சார்பில் 3 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த வழக்கில் தொடர்புடைய மற்ற 9 பேர் விடுவிக்கப்பட்டனர்.