சென்னிமலையில் அடையாளம் தெரியாத ஆண் உடல் மீட்பு

ஈரோடு மாவட்டம், சென்னிமலை காவல் எல்லைக்குட்பட்ட ஈங்கூர், வெட்டுக்காட்டுவலசு, ஓட்டக்குளம் அருகில் உள்ள பள்ளத்தில் ஒரு ஆண் உடல் கிடப்பதாக சென்னிமலை போலீசாருக்குத் தகவல் கிடைத்தது. 

அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று சோதனையிட்டதில், சடலமாக கிடந்தவருக்கு 30 முதல் 35 வயது இருக்கலாம் என்றும், வடமாநிலத்தைச் சேர்ந்தவராக இருக்கலாம் என்பதும், மேலும் வாயில் ரத்தம் வந்த நிலையில், உடலில் எறும்புகள் அரித்த காயமும், கழுத்தில் சிவப்பு பனியன் துணி கட்டப்பட்ட நிலையில் இறந்து கிடந்ததும் தெரியவந்தது. 

மேலும் அவர் அருகில் உள்ள புளியமரத்தில் பனியன் துணியால் தூக்குப்போட்டு, துணி அறுந்து அவர் கீழே விழுந்து இருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் சடலத்தை மீட்டு பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி