ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள பவானி ஆற்றின் கரையில் அமைந்துள்ள ஸ்ரீ வரசித்தி விநாயகர் கோயில் 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த கோவிலில் இன்று (ஜனவரி 1) ஆங்கில வருடப்பிறப்பு முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு விநாயகா பெருமான் அருள்பாலித்தார். விநாயகரை அதிகாலை முதலே பக்தர்கள் குடும்பத்துடன் வந்து நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.