தாளவாடி அருகே காளிதிம்பம் கிராமத்தில் வசிக்கும் 70 ஊராளி இன பழங்குடியின குடும்பங்களின் குறைகளை பழங்குடியினர் நலத்துறை இயக்குனர் அண்ணாதுரை கேட்டறிந்தார். வனவிலங்குகளிடமிருந்து பாதுகாக்க அகழி பராமரிப்பு, சோலார் வேலி அமைத்தல், மற்றும் கிராமத்திற்கு பேருந்து வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்தனர். இயக்குனர் அண்ணாதுரை கிராம மக்களுடன் அமர்ந்து கலந்துரையாடி ஆய்வு மேற்கொண்டார்.