சத்தியமங்கலத்தில் குழந்தையுடன் திருமணமான இளம்பெண் மாயம்

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த அலத்துக்கோம்பை அன்னநகரைச் சேர்ந்தவர் நாகராஜ். இவரது மகள் இலக்கியா (25). இவர் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு மஞ்சுநாதன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். 

இத்தம்பதிக்கு வித்யாபாரதி (3) என்ற குழந்தை உள்ளது. தம்பதிக்கிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டில் கடந்த ஓராண்டுக்கு முன்பு விவாகரத்து பெற்று பிரிந்து வாழ்ந்தனர். இதனால், இலக்கியா தனது மகள் வித்யாபாரதியுடன், தனது தந்தை நாகராஜ் வீட்டில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில், கடந்த 15ம் தேதி காலை 9.30 மணிக்கு மகளுடன் சென்ற இலக்கியா, பின்னர் வீடு திரும்பவில்லை. 

பின்னர் அக்கம் பக்கத்தில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து, தாய் ஈஸ்வரி அளித்த புகாரின் பேரில், மாயமான இலக்கியா மற்றும் அவரது மகள் வித்யாபாரதியை, சத்தியமங்கலம் போலீசார் தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி