ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள கரட்டூர் பூ மார்க்கெட்டில் நேற்று காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரை பூக்கள் ஏலம் நடந்தது. இதற்கு சத்தியமங்கலம் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து விவசாயிகள் சுமார் 9 டன் பூக்களை கொண்டு வந்திருந்தனர். பல்வேறு பகுதிகளில் இருந்தும் வியாபாரிகள் வந்து பூக்களை ஏலம் எடுத்தனர்
விலை நிலவரம்: கிலோவுக்கு (ரூபாயில்)
மல்லிகை: 500/880
முல்லை: 260/400
காக்கடா: 330/375
செண்டு: 30/70
கோழி கொண்டை: 44/120
ஜாதி முல்லை: 500/600
கனகாம்பரம்: 500/600
அரளி: 80
துளசி: 50
செவ்வந்தி: 200