சத்தியமங்கலம்: மல்லிகைப்பூ கிலோ ரூ. 840 ஏலம் போனது

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள கரட்டூர் பூ மார்க்கெட்டில் நேற்று காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரை பூக்கள் ஏலம் நடந்தது. இதற்கு சத்தியமங்கலம் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து விவசாயிகள் சுமார் 9 டன் பூக்களை கொண்டு வந்திருந்தனர். பல்வேறு பகுதிகளில் இருந்தும் வியாபாரிகள் வந்து பூக்களை ஏலம் எடுத்தனர். 

நிலவரம்: விலை- கிலோ1க்கு
மல்லிகை: 560/840
முல்லை: 360/400
காக்கடா: 300/350
செண்டு: 30/60
கோழி கொண்டை: 40/100
ஜாதி முல்லை: 500/600
கனகாம்பரம்: 600/800
அரளி: 160
துளசி: 60
செவ்வந்தி: 220

தொடர்புடைய செய்தி