அவருடன் வந்த சிறுமிகள் ஊருக்குள் சென்று அங்கிருந்தவா்களிடம் ஹேமா கிணற்றில் தவறி விழுந்தது குறித்து தெரிவித்துள்ளனா். அவா்கள் அங்கு வந்த பாா்த்த போது சிறுமி கிணற்றில் மூழ்கியது தெரியவந்தது. தகவலின் பேரில் அங்கு வந்த வேலாயுதம்பாளையம் தீயணைப்புத் துறையினா் கிணற்றில் மூழ்கி இறந்த சிறுமி ஹேமாவின் உடலை மீட்டனா். ஜேடா்பாளையம் காவல் துறையினா் சிறுமியின் உடலை உடற்கூறு ஆய்வுக்காக வேலூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தங்கத்தின் விலை ஒரே ஆண்டில் கண்ட உச்சம்