ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள மேட்டுப்பாளையம் ரோட்டில் காந்திநகர் வாட்டர் டேங்க் பகுதியில் சத்தியமங்கலம் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது அங்கு கஞ்சா விற்றதாக அதே பகுதியை சேர்ந்த கோகுல்நாத் (வயது 26) என்பவரை கைது செய்ததுடன், அவரிடம் இருந்து 20 கிராம் கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர்.