இதைத் தொடர்ந்து கடையின் உரிமையாளர் சத்தியமங்கலம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். மளிகை கடை அருகே வங்கி செயல்பட்டு வருகிறது. தீயணைப்பு வீரர்கள் ஒரே நேரத்தில் தீயை அணைத்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. எனினும் மளிகை கடையில் உள்ள சில பொருட்கள் எரிந்து நாசமாகின. விபத்து குறித்து சத்தியமங்கலம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
குதிக்க முடியாத ஒரே பாலூட்டி விலங்கு எது தெரியுமா?