இந்நிலையில் கடந்த சில நாட்களாக நீர்ப்பிடிப்பு பகுதியில் பரவலாக மழை பெய்து வந்ததால் அணையின் நீர்மட்டம் உயர்ந்து வந்தது. தற்போது நீர் பிடிப்பு பகுதியில் மழைப்பொழிவு இல்லாததால் அணைக்கு நீர்வரத்து குறைந்துள்ளது. இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 83.11 அடியாக உள்ளது. இன்று காலை அணைக்கு 1,042 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது.
பவானிசாகர் அணையில் இருந்து குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 150 கன அடி நீரும், தடப்பள்ளி-அரக்கன் கோட்டை பாசனத்திற்கு 400 கன அடியும், கீழ்பவானி வாய்க்கால் பாசனத்திற்கு 5 கன அடி நீரும் என மொத்தம் 555 கன அடி நீர் திறந்து விடப்பட்டு வருகிறது. மழை பெய்யாததால் அணைகளின் நீர்மட்டம் குறைந்து வருகிறது.