ஈரோடு மாவட்டம் தாளவாடி மலைப் பகுதியின் தலமலை பகுதியில் வசிக்கும் கரடி ஒன்று நேற்று ரோட்டில் உலா வந்தது. இதை கண்ட வாகன ஓட்டுனர்கள் செல்போனில் படம் பிடித்து மகிழ்ந்தனர். வனவிலங்குகளை படம் பிடிப்பது, விளையாடுவது, துன்புறுத்துவது போன்ற செயல்களில் ஈடுபட்டால் கடுமையான தண்டனை வழங்கப்படும் என வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.