ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த தாளவாடி அருகே உள்ள ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் இன்று (ஜனவரி 4) தேங்காய்ப் பருப்பு ஏலம் நடந்தது. இதில் அதன் சுற்றுவட்டார பகுதியில் இருந்து விவசாயிகள் தேங்காய்ப் பருப்பு கொண்டு வந்தனர். அதனை திருப்பூர், சேலம், கரூர், நாமக்கல், பொள்ளாச்சி போன்ற மாவட்டங்களில் இருந்து வந்த வியாபாரிகள் வாங்கிச் சென்றனர். தேங்காய்கள்: 2380, எடை: 11.90, குவிண்டால் மதிப்பு: ரூ.68506/- காய் விலை அதிகவிலை: ரூ.47.50, குறைந்தவிலை: ரூ.28.50, சராசரிவிலை: ரூ.38.00.