இதுகுறித்த தகவல் கிடைத்ததும் சத்தியமங்கலம் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அபுதாகிரை தேடும் பணியில் ஈடுபட்டனர். எனினும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. இந்த நிலையில் நேற்று முன்தினம் (டிச.30) அதே பகுதியில் உள்ள வட்டப்பாறை என்ற இடத்தின் அருகே ஆற்றில் அபுதாகிர் பிணமாக மிதந்தார்.
இதைத்தொடர்ந்து அபுதாகிரின் உடலை பவானிசாகர் போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.