ஈரோடு மாவட்டம் தாளவாடி ஒன்றியத்திற்கு உட்பட்ட திங்களூர் ஊராட்சியில் குடியரசு தின விழாவை முன்னிட்டு கிராம சபை கூட்டம் நடைபெற்றது. சுஜ்ஜல்கரை கிராமத்தில் 24 மணி நேரமும் கர்நாடக மது விற்பனை படுஜோராக நடப்பதாகவும், விற்பனையை தடுக்க தவறிய கடம்பூர் காவல் துறையினரிடம் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தாளவாடி ஒன்றியத்தில் பல கிராமங்களில் கிராம சபை கூட்டம் முறையாக நடத்தப்படவில்லை என பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்