சத்தி அருகே உள்ள அரியப்பம்பாளையம் பகுதியில் வாலிபர்கள் சிலர் பிறந்த நாள் கொண்டாடியுள்ளனர். பைக் மீது கேக்கை வைத்து வாலிபர் ஒருவர் பட்டாக் கத்தியால் கேக்கை வெட்டியுள்ளார். சுற்றி இருந்த வாலிபர்கள் சத்தம் போட்டு பர்த்டே வாழ்த்துக்கள் கூறி கொண்டாடுவதை ஒருவர் வீடியோ எடுத்து சோஷியல் மீடியாவில் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறும்போது பட்டாக்கத்தியுடன் இரவில் பிறந்தநாள் கொண்டாடிய நபர்களை அடையாளம் கண்டு அவர்கள் மீது போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அதிமுகவை அதிர்ச்சியில் ஆழ்த்திய பாஜக: 53 தொகுதிகள் கேட்டதால் பரபரப்பு