ஈரோடு வடக்கு மாவட்டம் அரியப்பம்பாளையம் பேரூராட்சி நேரு நகர் சமுதாய கூடத்தில் டாக்டர் அகர்வால்'ஸ் கண் மருத்துவமனை மற்றும் அரியப்பம்பாளையம் பேரூராட்சி இணைந்து நடத்தும் மாபெரும் கண் சிகிச்சை முகாமை நமது அரியப்பம்பாளையம் பேரூராட்சி மன்ற தலைவர் திருமதி மகேஸ்வரி செந்தில்நாதன் அவர்கள் துவங்கி வைத்தார். அவருடன் ஈரோடு வடக்கு மாவட்டம் அரியப்பம்பாளையம் பேரூர் திமுக செயலாளர் திரு A. S. செந்தில்நாதன் MA, LLM கவுன்சிலர்கள் ஜெயராஜ், கிருஷ்ணவேணி மாணிக்கம், சங்கீதா கந்தசாமி செயலாளர் S. சுப்பிரமணியம் மாவட்ட பிரதிநிதி N. மாணிக்கம் ஈரோடு வடக்கு மாவட்ட அமைப்புசாரா ஓட்டுனர் அணி துணை அமைப்பாளர் S. T. கந்தசாமி மற்றும் பேரூராட்சி பணியாளர்கள், மருத்துவர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.