தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் வந்து செல்கின்றன. குறிப்பாக தாளவாடியில் கொள்முதல் செய்யப்படும் கரும்புகள் அதிக அளவில் லாரிகளில் சத்தியமங்கலத்தில் உள்ள தனியார் சர்க்கரை ஆலைக்கு கொண்டு செல்லப்படுகிறது. அவ்வப்போது வனப்பகுதியை விட்டு வெளியேறும் யானைகள் சத்தியமங்கலம் - மைசூர் தேசிய நெடுஞ்சாலையோரம் வரும் வாகனங்களை வழிமறித்து கரும்புத் துண்டுகளை சாப்பிடுவதை வழக்கமாக வைத்துள்ளது. இந்நிலையில் ஆசனூர் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய காட்டு யானை ஒன்று காரப்பள்ளம் சோதனைச் சாவடி அருகே சத்தியமங்கலம் - மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் நடமாடியது. அந்த வழியாக வந்த கார், அரசுப் பஸ், லாரிகளை வழிமறித்து கரும்புக் கட்டு உள்ளதா என பார்த்தது. இதனால் வாகனஓட்டிகள் அச்சம் அடைந்தனர்.
ரஜினிகாந்த் குறித்து ஆதவ் அர்ஜுனா பேச்சு.. இபிஎஸ் கண்டனம்