தாம்பூல தட்டோடு ஈரோடு கலெக்டர் ஆபிஸ் வந்த விவசாயிகள்

ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் ராஜகோபால் சுன்கரா தலைமையில் நடைபெற்றது. தமிழ்நாடு அரசின் கூட்டுறவு துறையின் மாநில பதிவாளர் கடந்த 26ஆம் தேதி கிஷான் கடன் அட்டை மூலம் பயிர்க்கடன் உள்ளிட்ட அனைத்து வகையான கடன்களையும் விவசாயிகளுக்கு வழங்குவதற்கு விவசாயிகளின் சிவில் ரிப்போர்ட் பார்க்க வேண்டும் என அனைத்து கூட்டுறவுச் சங்கங்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். இந்த சுற்றறிக்கைக்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். 

இதன் தொடர்ச்சியாக ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் தமிழக விவசாயிகள் பாதுகாப்புச் சங்கத்தைச் சேர்ந்த விவசாயிகள் விவசாய விளைபொருட்களான தேங்காய், வாழைப்பழம், மாம்பழம், வெற்றிலை, நெல் மற்றும் பூ ஆகியவற்றை தாம்பூலத் தட்டில் வைத்துக்கொண்டு கூட்டுறவுச் சங்கங்களில் விவசாயிகளுக்கு கடன் வழங்குவதற்கு சிவில் ரிப்போர்ட் பார்க்க வேண்டும் என்ற சுற்றறிக்கையை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

தொடர்புடைய செய்தி