இந்நிலையில் கர்நாடக மாநில மைசூரில் இருந்து கோவை மாவட்டத்திலுள்ள ஒரு கல்குவாரிக்கு 20 ஆயிரம் லிட்டர் டீசலை ஏற்றிக்கொண்டு டேங்கர் லாரி ஒன்று கிளம்பி வந்து கொண்டிருந்தது. லாரியை கோவை மாவட்டம் பொள்ளாச்சி பகுதியைச் சேர்ந்த கவுதம் (29) என்பவர் ஓட்டி வந்தார். அவருக்கு உதவியாக கோவை நேரு நகரைச் சேர்ந்த சந்துரு (19) என்பவர் உடன் வந்து கொண்டிருந்தார். ஈரோடு மாவட்டம் ஆசனூர் அருகே செம்மண் திட்டு என்ற பகுதியில் அந்த டேங்கர் லாரி வந்து கொண்டிருந்தபோது திடீரென எதிரே இருசக்கர வாகனத்தில் வந்த நபர் லாரியின் குறுக்கே வந்து விட்டார். இதனால் விபத்தை தவிர்ப்பதற்காக லாரி டிரைவர் திடீரென பிரேக் போட்டு விட்டார். இதனால் லாரி கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் கவிழ்ந்தது. லாரி கவிழ்ந்ததால் 20 ஆயிரம் லிட்டர் டீசல் சாலையில் கொட்டி வீணானது. நல்ல வாய்ப்பாக தீ விபத்து எதுவும் ஏற்படவில்லை.
ஈரோட்டில் தவெக விஜய் பரப்புரைக்கு அனுமதி!