அந்தியூர் அருகே கொல்லம்பாளையம் பகுதியைச் சேர்ந்த 52 வயது தொழிலாளி காவேரி, நேற்று மறவன் குட்டை பஸ் நிறுத்தம் அருகே சாலை கடக்கும்போது கார் மோதி படுகாயமடைந்து, அந்தியூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்பாக, காரை ஓட்டி வந்த சித்திரெட்டிபாளையம் பகுதியைச் சேர்ந்த பிரபு குமார் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.