அந்தியூர்: காரில் கடத்தி வரப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்

அந்தியூர் அருகே, காரில் கடத்தி வரப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. அரசால் தடை செய்யப்பட்டுள்ள புகையிலை பொருள்கள் விற்பனையை தடுக்க மாவட்ட போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். அதன் அடிப்படையில் ஈரோடு மாவட்டம், அந்தியூர் அடுத்துள்ள பர்கூர் மலை போலீசார் அங்குள்ள செக் போஸ்ட் பகுதியில் கண்காணிப்பு மற்றும் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். 

அப்போது அந்த வழியாக வந்த கார் ஒன்றை தடுத்து சோதனையிட்டதில் அந்த காரில் அரசால் தடை செய்யப்பட்டுள்ள பான் மசாலா, குட்கா போன்ற புகையிலை பொருள்கள் கடத்தி வரப்பட்டது தெரியவந்தது. விசாரணையில், காரை ஓட்டி வந்தவர் ஈரோடு மாவட்டம், பவானி தாலுகா, அத்தாணி, விநாயகர் கோயில் வீதியைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி (43) என்பதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். மேலும் காரில் கடத்தி வரப்பட்ட ரூ. 7,200 மதிப்பிலான சுமார் 8 கிலோ புகையிலை பொருள்கள் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட கார் ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர்.

தொடர்புடைய செய்தி