அந்த வகையில் இந்த ஆண்டு அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் பங்குனி உத்திர தேர்த்திருவிழா கடந்த 5ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதனைத் தொடர்ந்து திருக்கல்யாண உற்சவம், அருள்மிகு சண்முகருக்கு சிகப்பு சாத்தி, காவடி பால் குடாபிஷேகங்கள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
அதனைத் தொடர்ந்து இன்று காலை முதல் சுவாமி மயில் வாகனத்தில் தேர்வீதி வலம் வருதல், சுவாமி திருத்தேருக்கு எழுந்தருளுதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன. பின்னர் முக்கிய நிகழ்வான பங்குனி உத்திர தேர்திருவிழா மாலை மிகவும் விமர்சையாகக் கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் மேளதாளங்கள் முழங்க கோபிசெட்டிபாளையம் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்தும் வந்திருந்த ஏராளமான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்து தங்கள் நேர்த்திக் கடனை செலுத்தினர்.