தாளவாடி: கரும்பு தோட்டத்தில் இருந்த 3 குட்டிகளையும் கவ்விச் சென்ற தாய்

தாளவாடி கிராமத்தைச் சேர்ந்தவர் சுப்பிரமணி. இவருக்கு சொந்தமான தோட்டத்தில் கரும்பு பயிரிட்டு இருந்தார். கடந்த 3 நாட்களுக்கு முன்பு தொழிலாளர்கள் கரும்பு வெட்டிக் கொண்டிருந்தபோது பிறந்து 15 நாட்களை ஆன சிறுத்தை குட்டி பிடிப்பட்டது. இதனால் தாய் சிறுத்தை எந்த நேரத்திலும் வரக்கூடும் என்பதால் வனத்துறையினர் சிறுத்தை குட்டியை 3 கண்காணிப்பு கேமராக்கள் அமைத்து கண்காணித்து வந்த நிலையில் அன்று நள்ளிரவில் தாய் சிறுத்தை கரும்பு தோட்டத்திற்குள் வந்து தன் குட்டியை வாயில் கவ்வியபடி எடுத்துச் சென்றது. இந்த காட்சி அங்கு பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது. 

இந்நிலையில் நேற்று முன்தினம் வழக்கம்போல் தோட்டத்தில் கரும்பு வெட்டும் தொழிலாளர்கள் கரும்பு வெட்டும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது மேலும் 3 சிறுத்தை குட்டிகள் படுத்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வனத்துறையினர் சிறுத்தை குட்டிகளை மீட்டு தனித்தனியாக வைத்தனர். நள்ளிரவில் தோட்டத்துக்குள் வந்த தாய் சிறுத்தை ஒவ்வொரு சிறுத்தை குட்டியை 15 நிமிடத்திற்கு ஒருமுறை வந்து மீட்டு மீண்டும் வனப்பகுதிக்குள் வாயில் கவ்வியபடி எடுத்துச் சென்றது. இந்த காட்சிகள் அனைத்தும் அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களில் பதிவாகி இருந்தது.

தொடர்புடைய செய்தி