இந்நிலையில் நேற்று முன்தினம் வழக்கம்போல் தோட்டத்தில் கரும்பு வெட்டும் தொழிலாளர்கள் கரும்பு வெட்டும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது மேலும் 3 சிறுத்தை குட்டிகள் படுத்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வனத்துறையினர் சிறுத்தை குட்டிகளை மீட்டு தனித்தனியாக வைத்தனர். நள்ளிரவில் தோட்டத்துக்குள் வந்த தாய் சிறுத்தை ஒவ்வொரு சிறுத்தை குட்டியை 15 நிமிடத்திற்கு ஒருமுறை வந்து மீட்டு மீண்டும் வனப்பகுதிக்குள் வாயில் கவ்வியபடி எடுத்துச் சென்றது. இந்த காட்சிகள் அனைத்தும் அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களில் பதிவாகி இருந்தது.
மைதானத்தில் ரகளை செய்த மெஸ்ஸி ரசிகர்கள் மீது போலீஸ் தடியடி