இந்நிலையில் ஜீர்கள்ளி வனச்சரகத்துக்கு உட்பட்ட மல்லன்குழி கிராமத்தை சேர்ந்தவர் காளசாமி (49), என்பவர் தென்னை சாகுபடி செய்துள்ளார். நேற்று இரவு வனப்பகுதியில் இருந்து வந்த யானைகள் தோட்டத்தில் புகுந்து அங்கிருந்த தென்னை மரத்தை சேதப்படுத்தியுள்ளன. காலையில் சென்று தோட்டத்தில் பார்த்தபோது தென்னை மரம் சேதப்பட்டிருந்தது தெரிய வந்தது. யானைகளால் 40 தென்னை மரங்கள் சேதப்பட்டன. வனத்துறை உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
காரைக்குடி தொகுதியில் சீமான் எகிறும் ஆதரவு.. வெற்றி கிடைக்குமா?